மே 9 - பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு


மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.



தேர்வு முடிவுகளை இணையத் தளங்களிலும் எஸ்எம்எஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மே 14ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்திருந்தார். மே 13ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், அடுத்த நாளே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவது குழப்பமான நிலையை உருவாக்கும் என பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா தன்னுடனோ அரசிடமோ ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையான முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் மே 9ம் தேதியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைபச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
Share on Google Plus

About jeevan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment